உலகம்செய்திகள்

இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு

Share
4 4 scaled
Share

இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு

இலங்கை பொது போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்தானது என்று ரஷ்ய சுற்றுலா பயணி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ரஷ்ய பயணி ஒருவர் சுற்றுலா செல்வதற்காக கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு வருவதற்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியது
இது குறித்து ரஷ்ய பயணி கூறுகையில், “பொலன்னறுவைக்கு சென்ற பேருந்து 95Kmph வேகத்தில் சென்றது. சில சாலைகளில் 100Kmph வேகத்தில் சென்றது. நான் எனது கூகுள் மேப் (Google Map) செயலியின் மூலம் பேருந்தின் வேகத்தை பதிவு செய்தேன்.

இதனால், பேருந்து ஓட்டுநரிடம் மெதுவாக ஓட்டுமாறு கூறினேன். ஆனால், அவர் இதுபற்றி கேட்கவில்லை. பேருந்து பறப்பது போன்று இருந்தது. பக்கவாட்டில் பேருந்தை வளைத்து அலட்சியமாய் பிற வாகனங்களை முந்திச் சென்றது. இது எங்களது உயிருக்கு ஆபத்தானது.

நான் இலங்கையை சுற்றி பார்க்க வந்தேன். எங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லக்கூடிய சாதாரண சாரதி தேவை. பைத்தியக்கார சாரதி வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணம் செய்வது இலங்கை மக்களுக்கு தெரியும். இலங்கையில் பேருந்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது” என்று பேசினார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...