24 66322ea6634bb
உலகம்செய்திகள்

சொர்க்கத்தின் வாசல் இது தான்

Share

சொர்க்கத்தின் வாசல் இது தான்

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் தியான்மென் மலை சீனாவின் தேசிய பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மலையில் இயற்கையாக தோன்றி இருக்கும் வளைவானபகுதியைதான் சொர்க்கத்தின் வாசல் என்று குறிப்பிடுகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த வளைவு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த வளைவிலிருந்து எட்டிப் பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரித்துவிடும். அந்த அளவிற்கு இயற்கையின் அழகு வசீகரமாக இருக்கும்.

கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பின் இந்த மலைப் பகுதியில் கேபில் கார் அமைக்கப்பட்டது. கேபில் கார் மூலம் சுமார் 4000 அடி வரை சென்றடைய முடியும். அதுமாத்திரமன்றி மலைக்கு செல்ல சாலைகளும், மலையின் மீது கண்ணாடி நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சொர்கத்தின் வாசல் என்று அழைக்கப்படும் முனைக்கு செல்வதற்கு 999 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டியிருக்கும். இந்த படிக்கட்டுகள் சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் என்று சீனா மக்கள் கூறுகின்றனர்.

சீனாவின் கணிதத்தின் படி 9 என்ற எண் அதிர்ஷ்டத்தை குறிக்கும் எண்ணாக நம்பப்படுகிறது. அதனால்தான் 999 படிகள் கட்டப்பட்டுள்ளது என்று வரலாறு கூறுகிறது.

999 படிக்கட்டுகள் இருந்தாலும், சொர்க்கத்தின் வாசலை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வருடமும் இந்த இடத்திற்கு வந்து குவிகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...