21
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் 4,500 இராணுவ வீரர்கள், 250 அதிகாரிகள் ராஜினாமா!

Share

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் 250 அதிகாரிகள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் 250 அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக கவலைப்படும் குடும்பங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கணிசமான எண்ணிக்கையில் ராஜினாமா செய்யத் தூண்டி வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன் சில வீரர்கள் ஏற்கனவே பணியில் இருந்து விலகிவிட்டாலும், மற்றவர்கள் ராஜினாமா செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது பாகிஸ்தான் இராணுவத்தில் மோசமடைந்து வரும் நெருக்கடியைக் குறிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் ராஜினாமா தொடர்பாக உள்துறைக்கு எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தான் இராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக வீரர்கள் ராஜினாமா செய்துள்ளதாக மற்றொரு காரணமும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...