14487583 indonesia
உலகம்செய்திகள்

இந்தோனேஷியாவில் வெடிக்கத் தயாராகும் பர்னி தெலோங் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Share

இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில் உள்ள பர்னி தெலோங் (Burni Telong) எரிமலை எந்நேரமும் வெடிக்கலாம் என்ற அபாயம் நிலவுவதால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பெனர் மெரியா மாவட்டத்தில் அமைந்துள்ள 8,600 அடி உயரமான இந்த எரிமலையில், நேற்று முன்தினம் மட்டும் ஏழு முறை பலத்த அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகள் எரிமலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரம் வரை உணரப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் இதன் செயல்பாடுகள் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது.

எரிமலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் தடை விதித்துள்ளது.

எரிமலைக்கு மிக அருகில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

120-க்கும் மேற்பட்ட உயிர்ப்புள்ள எரிமலைகளைக் கொண்ட இந்தோனேஷியாவில், பர்னி தெலோங் எரிமலையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...