14487583 indonesia
உலகம்செய்திகள்

இந்தோனேஷியாவில் வெடிக்கத் தயாராகும் பர்னி தெலோங் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Share

இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில் உள்ள பர்னி தெலோங் (Burni Telong) எரிமலை எந்நேரமும் வெடிக்கலாம் என்ற அபாயம் நிலவுவதால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பெனர் மெரியா மாவட்டத்தில் அமைந்துள்ள 8,600 அடி உயரமான இந்த எரிமலையில், நேற்று முன்தினம் மட்டும் ஏழு முறை பலத்த அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகள் எரிமலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரம் வரை உணரப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் இதன் செயல்பாடுகள் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது.

எரிமலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் தடை விதித்துள்ளது.

எரிமலைக்கு மிக அருகில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

120-க்கும் மேற்பட்ட உயிர்ப்புள்ள எரிமலைகளைக் கொண்ட இந்தோனேஷியாவில், பர்னி தெலோங் எரிமலையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...