14487583 indonesia
உலகம்செய்திகள்

இந்தோனேஷியாவில் வெடிக்கத் தயாராகும் பர்னி தெலோங் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Share

இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில் உள்ள பர்னி தெலோங் (Burni Telong) எரிமலை எந்நேரமும் வெடிக்கலாம் என்ற அபாயம் நிலவுவதால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பெனர் மெரியா மாவட்டத்தில் அமைந்துள்ள 8,600 அடி உயரமான இந்த எரிமலையில், நேற்று முன்தினம் மட்டும் ஏழு முறை பலத்த அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகள் எரிமலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரம் வரை உணரப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் இதன் செயல்பாடுகள் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது.

எரிமலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் தடை விதித்துள்ளது.

எரிமலைக்கு மிக அருகில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

120-க்கும் மேற்பட்ட உயிர்ப்புள்ள எரிமலைகளைக் கொண்ட இந்தோனேஷியாவில், பர்னி தெலோங் எரிமலையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...