8 26 scaled
உலகம்செய்திகள்

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

Share

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தான் ஆறுதலடைந்ததாக ஒரு தந்தை கூறும் செய்தி, உண்மையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பயங்கர முகத்தை உலகம் கண்டுகொண்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களில் பலியான குழந்தைகளில் ஒன்று, அயர்லாந்தைச் சேர்ந்த தாமஸின் (Thomas Hand) குழந்தை.

தன் மகளுக்கு என்ன ஆனதோ என தான் கவலையில் இருந்தபோது, அவள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டாள் என்ற செய்தி கேட்டு, நான் ஆறுதலடைந்தேன், புன்னகைக்கக் கூட செய்தேன் என்று கூறியுள்ளார் தாமஸ். தாமஸின் மகள் பெயர் எமிலி (Emily, 8).

நான் கேட்ட ஆறுதலளிக்கும் செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் தாமஸ். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பெண்களை என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அது சாவை விட மோசமானது என்பது உங்களுக்குப் புரியும் என்கிறார் தாமஸ்.

அதாவது, தன் அழகான பெண் குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவின் கையில் சிக்கி, அவர்களால் சீரழிக்கப்படுவதைவிட, அவள் இறந்துவிட்டாள் என்று தனக்குக் கிடைத்த செய்தி தன்னை ஆறுதலடையச் செய்கிறது என்கிறார் தாமஸ்.

கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தைகளையே விடாதவர்கள், குழந்தைகளின் கைகளைக் கட்டிவைத்து, தீவைத்துக் கொளுத்தி ரசிப்பவர்கள் கையில், தன் மகள் எமிலி சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்த தாமஸுக்கு, அவளது மரணம் ஆறுதலையளித்துள்ளதில் ஆச்சரியம் இல்லையே!

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...