செய்திகள்உலகம்

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா!

Share
modii scaled
Share

உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை  இந்தியா உருவாக்கியுள்ளது.

இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு அதற்கான வளங்களும் வசதிகளும் தம்மிடம் உள்ளன எனவும் உலகிலுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அனைவரும் முன்வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,

துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எங்களுடைய ஜனநாயகம் அதன் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ வளர்ச்சியின் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்கின்றது.

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும். உலகமும் மாறும் கொரோனா காலத்தில் இந்தியா பல சவால்களை சந்தித்துள்ளது. உலகின் பல நாடுகளும் கொரோனா பரவலால் பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த அவையில் பெருமையுடன் கூற விரும்புகிறேன். அத்துடன் இந்திய விஞ்ஞானிகள் கொவிட்-19 எதிராக நாசியூடாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து வருகின்றனர்.

இன்று பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதம் உலகின் முன் அதிகரித்து வருகின்றது.

பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தைத் தாக்குதலை நடத்தவோ பயங்கரவாதத்தை பரப்பவோ பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள சூழ்நிலையை எந்தவொரு நாடும் அதன் சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...