download 4 1 9
இந்தியாஉலகம்செய்திகள்

காதலை கைவிட்டதால் காதலியை சித்ரவதை செய்த வாலிபர் !

Share

காதலை கைவிட்டதால் காதலியை சித்ரவதை செய்த வாலிபர் !

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல்.  திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் தனக்கு திருமணமானதை மறைத்து பழகினார். இந்த பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதை அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுடன் இருந்த காதலை முறித்து கொண்டார். மேலும் அவரை சந்திக்கவும் மறுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியையும் வைத்தார்.

இதில் உடலில் எரிச்சல் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி சூரத் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...