8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை
உலகம்செய்திகள்

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

Share

8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை

அமெரிக்காவில் 8 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைக்கேல் மெடினா. இவர் தனது 8 வயது மகள் சரபி மெடினா உடன் போர்ட்டேஜ் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இரவு 8.40 மணியளவில் தந்தை-மகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

இதனையடுத்து மகளை காப்பாற்ற அந்நபருடன் மைக்கேல் மெடினா போராடியுள்ளார். பின்னர் உடனடியாக சிறுமி சரபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிதாரியை கைது செய்தனர்.

அவரின் பெயர் மைக்கேல் குட்மேன் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...