மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம்,
நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி எல்லையையொட்டி அமைந்துள்ள பானிபங்கூ நகரில், மக்கள் தற்காப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.
இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில், நகரின் மேயரும் சாவடைந்துள்ளார் அத்தோடு மக்கள் தற்காப்புப் படையைச் சோ்ந்த 15 போ் காயமடைந்தனா் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நைஜா் இராணுவத்தின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தற்காப்புப் படையினா் பெரும் உதவி வருகின்றனா்.
அதன் காரணமாகவே அவா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment