1 1 scaled
உலகம்செய்திகள்

பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம்

Share

பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த திடீர் கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்பம் முதலே பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போரை மையப்படுத்திய தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீன் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவான மக்கள் பாரிஸ் நகர சாலையில் இறங்கி பாலஸ்தீன கொடியுடன் கோஷங்களை எழுப்பினர்.

அதே சமயம் இஸ்ரேலிய ஆதரவு மக்களும் ஹமாஸின் தாக்குதல் மற்றும் பிணைக் கைதிகள் சிறைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்களை பாரிஸ் நகரில் நிகழ்த்தினர்.

சில சமயங்களில் இரண்டு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு விடும் என்ற மோசமான சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான பொலிஸார்கள் பாரிஸ் நகர சாலையில் குவிக்கப்பட்டு போராட்டங்கள் களைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரான்ஸின் பாரிஸ் நகர ஈபிள் டவர் அருகே உள்ள சாலையில் இன்று நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 1 கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை பார்த்த சாட்சி ஒருவர் அளித்த தகவலில், தாக்குதல்தாரி “Allahu Ahkbar” என கோஷமிட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சாலையில் சென்ற பொதுமக்களை சீரற்ற முறையில் குத்தி காயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் 2016ம் ஆண்டில் பொதுமக்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று சிறையில் அடைக்கப்பட்ட அர்மண்ட் ரஜப்பூர்-மியான்டோப்(Armand Rajabpour-Miyandoab) என தெரியவந்துள்ளது.

மேலும் இவர் 2020ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸாரிடம் ரஜப்பூர்-மியான்டோப் தெரிவித்துள்ளார்.

அதில் அரேபியர்கள் கொல்லப்படுவதை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...