1 1 scaled
உலகம்செய்திகள்

பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம்

Share

பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த திடீர் கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்பம் முதலே பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போரை மையப்படுத்திய தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீன் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவான மக்கள் பாரிஸ் நகர சாலையில் இறங்கி பாலஸ்தீன கொடியுடன் கோஷங்களை எழுப்பினர்.

அதே சமயம் இஸ்ரேலிய ஆதரவு மக்களும் ஹமாஸின் தாக்குதல் மற்றும் பிணைக் கைதிகள் சிறைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்களை பாரிஸ் நகரில் நிகழ்த்தினர்.

சில சமயங்களில் இரண்டு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு விடும் என்ற மோசமான சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான பொலிஸார்கள் பாரிஸ் நகர சாலையில் குவிக்கப்பட்டு போராட்டங்கள் களைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரான்ஸின் பாரிஸ் நகர ஈபிள் டவர் அருகே உள்ள சாலையில் இன்று நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 1 கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை பார்த்த சாட்சி ஒருவர் அளித்த தகவலில், தாக்குதல்தாரி “Allahu Ahkbar” என கோஷமிட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சாலையில் சென்ற பொதுமக்களை சீரற்ற முறையில் குத்தி காயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் 2016ம் ஆண்டில் பொதுமக்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று சிறையில் அடைக்கப்பட்ட அர்மண்ட் ரஜப்பூர்-மியான்டோப்(Armand Rajabpour-Miyandoab) என தெரியவந்துள்ளது.

மேலும் இவர் 2020ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸாரிடம் ரஜப்பூர்-மியான்டோப் தெரிவித்துள்ளார்.

அதில் அரேபியர்கள் கொல்லப்படுவதை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...