ddd 1
உலகம்செய்திகள்

ஏமனில் பயங்கர மோதல் – 144 பேர் வரை பலி

Share

ஏமனில் மன்சூர் ஹாதி அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் மரிப் நகரில் இரு தரப்பும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 93 பேர் கொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் அரச படையினர் 51 பேரும் பலியாகியுள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையிலான மோதல் அங்கு தொடர்வதால் பதற்ற நிலையும் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் ஏமனின் தலைநகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி 7 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டியே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரச படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...