lTgdBnR8G1VEtfQgJE0e 1
உலகம்செய்திகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள்!

Share

சிங்கள  பேரினவாத அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023  பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு நிகழ்வும் பேரணியும் அத்துடன் கண்காட்சியும் இடம்பெற்றது.

உணர்வெழுச்சியுடன் மக்கள் பெரும் அதிர்வலையாக கோசம் எழுப்பியபடி பேரணி அன்றவெப்பன் நகரைச் சுற்றி வந்து opera plein எனுமிடத்தில் நிகழ்விற்காக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முடிவடைந்து,

வணக்க நிகழ்வு இடம் பெற்றது . 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மக்களுக்காக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி பெல்சிய நாட்டு மொழியிலும் தமிழ் மொழியிலும்  படுகொலை பற்றி நினைவுரையாற்றப்பட்டது.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இன அழிப்பின் சிறு நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் மக்களின் பசியாற்றிய கஞ்சி அதே உணர்வுடன் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...