tamilni 470 scaled
உலகம்செய்திகள்

சீனாவில் வேகமாக பரவும் சுவாச நோய்… முதியவர்கள், சிறார்களுக்கு பயணத்தடை விதித்த உலகின் முதல் நாடு

Share

சீனாவில் வேகமாக பரவும் சுவாச நோய்… முதியவர்கள், சிறார்களுக்கு பயணத்தடை விதித்த உலகின் முதல் நாடு

சீனாவில் தற்போது சுவாச நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் சிறார்கள் எவரும் அந்த நாட்டுக்கு பயணம் முன்னெடுக்க வேண்டாம் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் பரவிவரும் தொற்று தொடர்பில் தரவுகளை பகிர்ந்துகொள்ள கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு கோரியிருந்தது. மேலும், கொரோனா பரவலுக்கு முன்பு ஏற்பட்ட நெருக்கடி தற்போது தென்படவில்லை எனவும்,

அசாதாரண அல்லது புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையிலேயே தைவான் தமது குடிமக்களுக்கு பயணத்தடை விதித்துள்ளது.

மட்டுமின்றி, 2002- 2003 காலகட்டத்தில் சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் காரணமாக உலகளவில் 800 பேர் கொல்லப்பட்டனர். அந்த தொற்று பரவலையும் சீனா மூடி மறைக்கவே முயற்சிகள் முன்னெடுத்தது.

தற்போது வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தைவானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், தேவையின்றி சீனா, ஹொங்ஹொங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பயணம் அவசியம் என்றால், மக்கள் சீனாவுக்குச் செல்வதற்கு முன் காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பயணத்தடை விதிப்பதால் மட்டும் சுவாச நோய் பரவுவதை தடுக்க முடியாது என நிபுணர்கள் தரப்பு வாதிட்டுள்ளனர். மேலும், சீனாவில் தற்போது பரவும் சுவாச நோயானது பொதுவாக அனைத்து நாடுகளிலும் காணப்படுவது தான் என சீனா பதிலளித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...