சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!
உலகம்செய்திகள்

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

Share

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த சமூக ஆர்வலர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததற்காக அபராதம்
2020ஆம் ஆண்டு, இளைஞர்களான மூன்று சமூக ஆர்வலர்கள், ராணுவ சேவையை புறக்கணிக்குமாறும், கட்டாய ராணுவ சேவை செய்யாத இளைஞர்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியையும் புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், ஜூலை, அதாவது கடந்த மாதம் 27ஆம் திகதி, உச்ச நீதிமன்றம், அந்த இளைஞர்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளதுடன், அவர்கள் செலவிட்ட தொகையை ஃபெடரல் அரசு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுடைய செயல்கள் சட்டத்துக்கு விரோதமானவை என்றும், கோவிட் காலகட்டத்தில் ராணுவம் மக்களைக் காக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்கும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்ததாகவும் அவர்கள் மீது முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பாணைய நீதிபதியோ, முந்தைய தீர்ப்பு, மக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்கும் அரசியல் சாசன உரிமைக்கு முரணானது என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...