tamilnif 3 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ்

Share

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ்

பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதானியாவின் வடக்கு யார்க்ஷயரில் தனி நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாச பாதிப்பு அறிகுறிகள், லேசான காய்ச்சல் இருந்ததாகவும், ஆனால் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனுடன் தொடர்புடைய நபர் பன்றிகளுடன் நேரம் செலவிட்டாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் 50 பேர்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2009இல் பன்றிகளில் காணப்படும் ஒருவகை தொற்று பரவலாக மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வடக்கு யார்க்ஷயரின் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமைதுவ அமைப்பு (UKHSA) தெரிவித்துள்ளது.

இதனிடையே, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன், குறிப்பாக வயதானவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்கள், பிற சுகாதார நிலைமைகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பன்றிகள் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் மந்தைகளில் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...