tamilni 31 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்

Share

பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்

பிரித்தானியாவை தற்போது தாக்கி வருகின்ற சியாரன் புயல் காரணமாக அந்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 104 மைல் வேகத்தில் காற்றும், கனமழையையும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரித்தானியா முழுவதும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கையான “இரண்டு அம்பர் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் நடைமுறையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் சேனல் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் “மணிக்கு 70 மைல் முதல் 80 மைல் வேகத்திலோ அல்லது மணிக்கு 85 மைல் வேகத்தில் புயல் கரையைக் கடக்கக் கூடும்” என குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...