tamilni 32 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 31 திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 199 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதத்தை தவிர ஏனைய அனைத்து மாதங்களிலும் இந்த வருடம் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை 159 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதற்கமைவாக கடந்த மாதம் இந்தியாவிலிருந்து 28,222 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,629 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,454 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,548 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீனாவிலிருந்து 6,211 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, மாலைத்தீவு, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 25 ஆயிரத்து 455 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...