tamilni 31 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்

Share

பிரித்தானியா முழுவதும் மூடப்பட்ட 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்

பிரித்தானியாவை தற்போது தாக்கி வருகின்ற சியாரன் புயல் காரணமாக அந்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 104 மைல் வேகத்தில் காற்றும், கனமழையையும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரித்தானியா முழுவதும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கையான “இரண்டு அம்பர் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் நடைமுறையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் சேனல் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் “மணிக்கு 70 மைல் முதல் 80 மைல் வேகத்திலோ அல்லது மணிக்கு 85 மைல் வேகத்தில் புயல் கரையைக் கடக்கக் கூடும்” என குறிப்பிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...