17 1
இலங்கைஉலகம்செய்திகள்

அதிகரித்துள்ள போர் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து

Share

அதிகரித்துள்ள போர் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து

இலங்கை – இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதி வரையில் இந்த விமான போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார அறிவித்துள்ளார்.

ஈரான் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தெல் அவீவ் விமான நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 7ம் திகதிக்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணங்களை மேற்கொள்வதற்காக விமான பயணங்களை திட்டமிட்டு உள்ளவர்கள் தங்களது பயணங்களை மீள திட்டமிட்டுக் கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் வசித்து வரும் இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூதுவர் அறிவித்துள்ளார்.

முடிந்த அளவு தங்களது பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறும் வீடுகளிலேயே தங்கி இருக்குமாறும் இஸ்ரேல் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நிலக்கீழ் பதுங்கு குழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் வைத்தியசாலை வசதிகள் உள்ளதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...