1 18 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு: இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

Share

இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு: இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஆதரவு இந்தியாவுக்குத்தான் என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இந்தியா. அடுத்ததாக, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா.

இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான Milinda Moragoda, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், இலங்கை மக்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது நாடு தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளது என தான் கருதுவதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...