1 18 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு: இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

Share

இந்தியாவுக்குதான் எங்கள் ஆதரவு: இலங்கை உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஆதரவு இந்தியாவுக்குத்தான் என்று கூறியுள்ளார், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இந்தியா. அடுத்ததாக, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா.

இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான Milinda Moragoda, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், இலங்கை மக்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது நாடு தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளது என தான் கருதுவதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...