999
உலகம்செய்திகள்

ஸ்பெயின் எரிமலை வெடிப்பு – பிரான்ஸ் நோக்கி மாசு மண்டலம்

Share

ஸ்பெயின் நாட்டு கனெரித் தீவுகளில் எரிமலை வெடித்துள்ள நிலையில் அதிலிருந்து உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கி நகர்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனெரி தீவுக் கூட்டங்களில் ஒன்றாக La Palm தீவில் உள்ள கும்ப்ரே வீஜா எரிமலை கடந்த நில நாள்களாக வெடித்து தீப்பிளம்புகளையும் புகை மண்டலங்களையும் வெளிவிட்டு வருகின்றது.

இதில் அயல் இடங்களில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.  அந்தப் பகுதிகளை கரும்புகை மூடி மறைத்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கு மேலே திரண்டுள்ள மாசு மண்டலம் அங்கிருந்து நகர்ந்து பல்லாயிரகணக்கான மைல்கள் கடந்து பிரான்ஸ் வான்பரப்பை நோக்கி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவில் சல்பர் டயோக்சைட் கலந்த புகை மண்டலம் வளியோடு கலந்து வார இறுதியில் நாட்டின் வான்பரப்பினுள் பிரவேசிக்கத் தொடங்குகிறது எனவும் இதனால் அந்தப் பகுதிகளில் அமில மழை பொழிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வளியில் இவற்றின் செறிவை பொறுத்து மனிதர்க்ள மற்றும் விலங்குகள், விவசாய நடவடிக்கைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வார இறுதியில் பிரான்ஸின் சில பகுதியில் இடி, மின்னல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் மழைநீரில் அமில செறிவு அதிகமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...