செப். 11 மகாகவி நாள் – தமிழக முதல்வர் அறிவிப்பு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்றைய தினம் செப்ரெம்பர் 11 ஆம் நாள் வருடந்தோறும் மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படஉள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் பாரதி சிலையின் கீழ் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அலங்கரிக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் எனப் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

barathiyar 55

Exit mobile version