வெளிநாடுகளில் பிரபலங்கள் சிலர் ரகசியமாக பல கோடிக்கணக்கில் பணம் முதலீடுகள் செய்துள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின்,முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாடகி ஷகீரா உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாட்டின் வரிகளில் இருந்து தப்பிக்கும் வகையில் பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் இவர்கள் பல கோடிக்கணக்கில் முதலீடு செய்ததாக பண்டோரா ஆவணம் மூலம் வெளியாகியுள்ளது.
பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இதற்கு முன் இந்த பதுக்கல் முறைகேட்டில் சிக்கி உள்ளனர். இப்படி பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணம்தான் பண்டோரா ஆவணம். இதை ஐசிஐஜே எனப்படும் The International Consortium of Investigative Journalists அமைப்பு இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
உலக வரலாற்றில் வெளியாகிய ஆவணங்களில் இதுவே மிகப்பெரிய பண்டோரா ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment