24 663f9cac5c174
உலகம்செய்திகள்

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு

Share

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு

மனித மூளையின் சிறிய மாதிரியில் 57,000 செல்கள் மற்றும் 150 மீற்றர் நரம்பு இணைப்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கண்டுப்பிடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கால் மற்றும் கை வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 45 வயதுப் பெண்ணின் புறணிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ஆரோக்கியமான திசுவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்தே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

புள்ளியில் உள்ள நரம்பியல் சுற்றுகள், இணைப்புகள், துணை செல்கள் மற்றும் இரத்த விநியோகத்தை வரைபடமாக்குவதற்கு ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் (Harvard researchers) கூகுளில் (Google) உள்ள இயந்திரக் கற்றல் நிபுணர்களுடன் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், மாதிரியின் 5,000 இற்கும் மேற்பட்ட துண்டுகளின் எலக்ட்ரான் நுண்ணோக்கி படங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனுடன் 57,000 தனிப்பட்ட செல்கள், 150 மீற்றர் நரம்பு இணைப்புகள் மற்றும் 23 சென்றிமீற்றர் இரத்த நாளங்கள் வெளிப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...