25 683cbda46aae6
உலகம்செய்திகள்

நேட்டோவை குறிவைக்க காத்திருக்கும் ரஷ்யா..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கிய அதிகாரி

Share

2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ நாடுகளின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என ஜெர்மனியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஆண்டுதோறும் 1,500 பீரங்கிகளையும் மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளையும் உற்பத்தி செய்வது உட்பட ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த இருப்புக்கள் உக்ரைன் போருக்கானது மாத்திரமல்ல எனவும் அவை நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இருக்கலாம் எனவும் அவர் கருதுகின்றார்.

போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையிலான மூலோபாய ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதியான சுவால்கி இடைவெளியை ரஷ்யா இலக்கு வைக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...