tamilni 154 scaled
உலகம்செய்திகள்

எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம்… அச்சத்தில் மற்றொரு நாடு: பரபரப்பாகும் போர்ச்சூழல்

Share

ரஷ்யா, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் ஸ்வீடன் நாடு போரை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக வெளியாகியுள்ள செய்திகளால் பதற்றம் உருவாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், தங்களுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதி நேட்டோ அமைப்பில் சேரத் தயாரானது ஸ்வீடன். ஆனால், அதன் முடிவு ரஷ்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ரஷ்ய ஜனாதிபதி புடின், நேட்டோ அமைப்பை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார். ஆகவே, நேட்டோவில் மேலும் மேலும் நாடுகள் சேர்ந்து அந்த அமைப்பை வலுப்படுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, ரஷ்ய எல்லையிலுள்ள ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைவது தனது நாட்டுக்கு ஆபத்து என அவர் கருதுகிறார்.

ஆகவே, ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றுவருவதால், ஸ்வீடன் மீது கோபத்திலிருக்கிறார் புடின்.

ஸ்வீடன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்த செய்திகள் முன்பே வெளியாகின. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென ஸ்வீடனில் பரபரப்பு உருவாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைனைத் தொடர்ந்து, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், மக்கள் போருக்குத் தயாராக இருக்குமாறு மூத்த ஸ்வீடன் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...