tamilni 155 scaled
உலகம்செய்திகள்

ஒன்றும் செய்யாமல் மேகனும், ஹரியும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்! கோல்டன் குளோப்பில் கிண்டல்

Share

புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் மேகன் மெர்க்கல் கலந்துகொள்ளாதது குறித்து காரணம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் Bevery Hills-யில் 81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பேட்ரிக் ஜே.ஆடம்ஸ், ஜினா டோரஸ், சாரா ராபர்ட்டி மற்றும் கேப்ரியல் மாச்ட் ஆகியோர் விழா மேடையில் மீண்டும் இணைந்தனர்.

ஆனால், இளவரசி மேகன் மெர்க்கல் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பிஸியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கோல்டன் குளோப் தரப்பில், ”நாங்கள் டச்சஸைக் கேட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் முன்னதாகவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால் வரமுடியாது என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

எனினும் விழாவில் மேகன் ஒரு பரபரப்பு உரையாடலாக இருந்தார். அதாவது, தொகுப்பாளர் ஜோ கோயால் அவர்களை கேலி செய்தார்.

அவர் விருதுகளை பெற்ற Succession தொடர் குறித்து கூறும்போது, ‘Succession-க்கு 9 பரிந்துரைகள் உள்ளன. அது பணக்கார, வெள்ளை, செயலிழந்த குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறந்த தொடர்…ஓ! இருங்கள், அது தான் கிரீடம். மன்னிக்கவும். ஹரியும் மற்றும் மேகன் மெர்க்கல் ஒன்றும் செய்யாமல் மில்லியன் கணக்கில் பணம் பெற்றார்கள்; அதுவும் Netflix மூலம் தான்’ கிண்டலடித்தார்.

மேலும், மேகன் ஏதேனும் Suits Projects-யில் தோன்றுவாரா என்று கேட்டதற்கு, ”நிச்சயமாக. மைக் மற்றும் ரேச்சல் சியாட்டலில் இருக்கிறார்கள். அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வர வேண்டும். அவர்கள் சில விடயங்களை சரி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஜினா டோரஸ் தங்களிடம் மேகனின் எண் எங்களிடம் இல்லை. ஆதலால் அவர் இதனை பார்ப்பார், விழாவை காண்பார், நாங்கள் இங்கே இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...