4 47
உலகம்செய்திகள்

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Share

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலின் போது ரஷ்யாவின் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கிய நிலையில் அண்மையில் உக்ரைனுக்கு வழங்கியது. இந்த விமானம் உண்மையில் அமெரிக்காவால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் திங்களன்று, ரஷ்யா நூறாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதன்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி கூறினார்.

கடந்த ஆண்டு, நேட்டோ படைகள் சுமார் 65 எஃப் -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தன.

எஃப்-16 ரக போர் விமானங்கள் தவிர, பேட்ரியாட் மற்றும் நாசா ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உக்ரைனிடம் உள்ளன. எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...