4 47
உலகம்செய்திகள்

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Share

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலின் போது ரஷ்யாவின் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கிய நிலையில் அண்மையில் உக்ரைனுக்கு வழங்கியது. இந்த விமானம் உண்மையில் அமெரிக்காவால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் திங்களன்று, ரஷ்யா நூறாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதன்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி கூறினார்.

கடந்த ஆண்டு, நேட்டோ படைகள் சுமார் 65 எஃப் -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தன.

எஃப்-16 ரக போர் விமானங்கள் தவிர, பேட்ரியாட் மற்றும் நாசா ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உக்ரைனிடம் உள்ளன. எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...