10 33
உலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் இரகசிய நகர்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் இரகசிய நகர்வு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீதான தாக்குதலின் அடுத்த கட்டத்தில் ஐரோப்பாவில் (Europe) பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பயங்கரவாத தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடலாம் என முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய (Russia) படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் மறைமுக போரில் ஐரோப்பாவின் அப்பாவி பொதுமக்கள் பலியாக வாய்ப்புள்ளது என குறித்த நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்துக்கு (Poland) எதிராக வான்வழியாக பயங்கரவாதச் செயல்களை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே மேற்படி இதன் பின்னணியை விளக்கியுள்ளார்.

பிரித்தானியாவின் (United Kingdom) பர்மிங்காமில் உள்ள ஒரு கிடங்கில் பொதி ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவத்தை குறிப்பிட்டு போலந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மனி மற்றும் போலந்தில் உள்ள சரக்கு விமானங்களிலும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய உளவு அமைப்புகலும் CIA ஐயும் இந்த திட்டத்தை ரஷ்யாவே முன்னெடுத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் ரஷ்யா திட்டவட்டமாக இதனை மறுத்துள்ளது.

முன்னதாக பனிப்போர் காலகட்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத இயக்கங்களுக்கு ரஷ்யா நிதியுதவி அளித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள குறித்த நிபுணர், தற்போது இந்த விமானப் பொதி திட்டங்களுடன் பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ரஷ்யாவின் சதி மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா முழுவதும் ரஷ்ய அரசு பயங்கரவாத தாக்குதல்கள் விரைவில் அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள அவர் ஐரோப்பாவில் ரஷ்ய நாசவேலைகள் குறித்து நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நோர்டிக் மற்றும் பால்டிக் நாடுகளின் எச்சரிக்கைகள் சரி என்பதற்கான தொடர்ச்சியான சான்றுகள் இருந்த போதிலும், யாரும் இன்னும் அவற்றைக் கேட்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என குறித்த நிபுணர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...