27 9
உலகம்செய்திகள்

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

Share

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவின் (Russia) இந்த mRNA தடுப்பூசியானது, நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும் அந்நாட்டு கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் அண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் தற்போது இறுதி ஆய்வுகளில் உள்ளதாகவும், ரஷ்ய சுகாதார அமைச்சகம் இந்த தடுப்பூசிகளை விரைவில் பொதுவாக பயன்படுத்தக்கூடியதாகும் எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி இறுதி ஆய்வுகளை நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும் எனவும் புடின் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...