rovoo
செய்திகள்உலகம்

முதியவர்களுக்கு உதவும் ரோபோ! – ஹைதராபாத் கணினி நிறுவனம் வடிவமைப்பு!

Share

தனிமையில் உள்ள முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள கணினி நிறுவனமான Achsala IT Solutions இதனை வடிவமைக்கிறது.

‘எல்ரோ’ என்ற பிராண்டின் கீழ் இந்த ரோபோக்கள் உருவாக்கப்படவுள்ளன.

குறித்த ரோபோ தொடர்பாக Achsala IT Solutions நிறுவுனர் ராஜேஷ் ராஜு கருத்து தெரிவிக்கையில், “மூத்த வயதினருக்கு உதவ சிறிய வடிவிலான ரோபோக்களை பயன்படுத்தவுள்ளோம். இந்த ரோபோ ஆங்கில மொழியை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா மாதிரியான தளங்களின் துணையோடு இதனால் உள்ளூர் மொழிகளையும் புரிந்து கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். .

இந்த ரோபோக்களால் மூத்த குடிமக்களுடன் நேரம் போவதே தெரியாமல் பொழுதை பேசிக் கழிக்கவும், அவர்களை எந்நேரமும் அக்டிவாக வைத்துக் கொள்ளவும், அவசர உதவிகள் தேவைப்படும் நேரத்தில் அடுத்தவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கவும் உதவமுடியும்.

மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் வெப்பம், ஒக்ஸிஜன் அளவு மாதிரியானவற்றை இந்த ரோபோ வழக்கமான இடைவெளியில் பரிசோதிக்கும்.

மருத்துவரை அணுக, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பெற உதவுதல் போன்ற பணிகளையும் இந்த ரோபோ ஆற்றவிருக்கிறது.

விரைவில் இந்த ரோபோவின் சேவை பொது பயன்பாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...