7 26
உலகம்செய்திகள்

அடுத்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள்: கனடா முடிவு

Share

அடுத்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள்: கனடா முடிவு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக, கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

2023ஆம் ஆண்டு, 5,00,000க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கியது. 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு 4,85,000 சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த ஆண்டில், அதாவது, 2025ஆம் ஆண்டில், 4,37,000 பேருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதிவாக்கிலிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில், குறைந்தபட்சம் 16 மாதங்களாவது படிக்கும் வகையிலான கல்வித்திட்டங்களில் சேருவோரின் துணைவர்களுக்கு மட்டுமே கனடாவில் பணி அனுமதி வழங்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...