7 14 scaled
உலகம்செய்திகள்

100 ஹமாஸ் தலைவர்களின் தலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்: விவேக் ராமசாமி ஆவேசம்

Share

100 ஹமாஸ் தலைவர்களின் தலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்: விவேக் ராமசாமி ஆவேசம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமி, காஸா எல்லையில் 100 ஹமாஸ் தலைவர்களின் தலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியில் இருந்து ஹமாஸை அகற்ற இஸ்ரேல் தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று விவேக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 7-ம் திகதி நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் 100 பேரின் தலைகளை காசா எல்லையில் மேடையில் வரிசைப்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விவேக் கூறினார்.

குடியரசுக் கட்சியின் யூத மாநாட்டில் ராமசாமி தனது உரையில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறினார்.

மேலும், 1948ல் இருந்து 22 நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட யூத மக்களை யூதர்கள் அரவணைத்தது போல் பாலஸ்தீனியர்களை அரபு நாடுகள் அரவணைக்க தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...