2 11 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் வரிசையில் சுவிஸ் கட்சி…

Share

புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் வரிசையில் சுவிஸ் கட்சி…

இன்றைய சுழலில், உலக நாடுகள் பலவற்றிற்கு, தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த, தக்கவைக்க, சமாளிக்க, புலம்பெயர்ந்தோர் தேவைப்படுகிறார்கள்.

ஜேர்மனி, கனடா போன்ற நாடுகள் அதை வெளிப்படையாகவே கூறுகின்றன.

ஆனால், சில நாடுகளோ, புலம்பெயர்தலை வைத்து அரசியல் செய்கின்றன. குறிப்பாக, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்து, மக்கள் ஆதரவை ஈர்க்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. ஜேர்மனி போன்ற நாடுகளில், வலது சாரிக்கட்சிகள் சில அதில் வெற்றியும் பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சுற்றுலா என்றால் இருகரம் நீட்டு வெளிநாட்டவர்களை வரவேற்கும் அந்நாடு, புலம்பெயர்ந்தோர் நாட்டுக்குள் வருகிறார்கள் என்றால், கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது உலகறிந்த விடயம்.

ஆக, அதைப் பயன்படுத்திகொண்டு சில கட்சிகள் அரசியல் செய்ய முடிவு செய்துள்ளன. வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, வெளிப்படையாகவே அதைச் சொல்லியுள்ளது.

சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கை கொண்ட கட்சியாகும். புகலிட சட்டங்களை கடுமையாக்குவதும், புலம்பெயர்தலைக் குறைப்பதும்தான் அதன் புலம்பெயர்தல் கொள்கைகள்.

புலம்பெயர்தல் குறித்து மக்களை எச்சரிக்கும் அக்கட்சி, வெளிநாட்டவர்கள், காப்பீடு மற்றும் பிற சமூக உதவிகள் பெறுவதன் மூலம், சுவிஸ் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக கருதுகிறது.

இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சி இந்த வார இறுதியில் நடைபெறும் தேர்தலில் வாக்குகளை அள்ளும் என்று கூறியுள்ளார், அக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Christian Imark.

அதற்குக் காரணம், புலம்பெயர்தல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றலுக்கான கட்டண அதிகரிப்பு ஆகியவையே தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்துக்கள் என வெளிப்படையாகவே கூறுகிறார் அவர்.

புலம்பெயர்தல் சுவிட்சர்லாந்துக்கு பெரிய தொல்லை என்று கூறும் Imark, ஏனென்றால், புலம்பெயர்ந்தோருக்காக உள்கட்டமைப்புகளையும் வீடுகளையும் அதிகரிக்கவேண்டியுள்ளது என்கிறார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...