24 6665320d8c2ea
உலகம்செய்திகள்

வடகொரிய தலைவரின் மூளையாக செயல்படும் நபர் இவர் தான்

Share

வடகொரிய தலைவரின் மூளையாக செயல்படும் நபர் இவர் தான்

வடகொரியாவின் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் அனைத்து கொடூர நடவடிக்கைகளுக்கும் பின்னால் மூளையாக செயல்படுபவர் யார் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் மிக மோசமான ஆட்சி, அல்லது கடும் போக்கு நடவடிக்கைகளுக்கு பின்னால், அவரது சகோதரி Kim Yo-jong மூளையாக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

வடகொரிய மக்கள் வேறு எந்த நாட்டவருடனும் தொடர்பில் இருக்க கூடாது என தடை விதிக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கான உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதும் Kim Yo-jong வகுத்த திட்டங்கள் என்றே கூறப்படுகிறது.

வடகொரியாவில் தலைமை பொறுப்புக்கு அவரால் மிக சமீபத்தில் வர முடியாது என்றாலும், கிம் ஜோங் உன் தமது மகளை முன்னிறுத்த வாய்ப்பிருப்பதால், அவரும் மிக இளவயது என்பதால் Kim Yo-jong மேலும் பலம் பெறுவார் என்றே கூறுகின்றனர்.

அத்துடன், Kim Yo-jong முதன்மை பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டால், அது உண்மையில் பேரழிவுக்கு காரணமாக அமையும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர். Kim Yo-jong அளவுக்கு புத்திசாலி அல்ல கிம் ஜோங் உன் என குறிப்பிடும் நிபுணர்கள், தமது சகோதரரை இயக்குவதே Kim Yo-jong என்றே கூறுகின்றனர்.

சகோதரர்கள் இருவரும் சுவிட்சர்லாந்தில் வசித்த 1996 முதல் 2001 வரையான காலகட்டத்தில் Kim Yo-jong மிகவும் படிப்பாளியாக காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது. தமது சகோதரர் கிம் ஜோங் உன்னை விடவும் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் Kim Yo-jong.

மட்டுமின்றி, தமது சகோதரரை விட உலக நாடுகளின் அரசியலை உன்னிப்பாக கவனித்துவருபவர் Kim Yo-jong என்றே கூறப்படுகிறது.

தற்போதும் உயர் பதவியில் இருக்கும் Kim Yo-jong தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளதுடன், அவர்கள் எடுக்கும் முடிவு தான் வடகொரியாவை அடுத்த கட்ட நகர்வுக்கு நகர்த்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...