சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

Share

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், திருமண புகைப்படம் வெளியிட தயாரா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அவர், “சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

மேலும், “சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்” எனவும் கூறினார்.

இந்த புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.

திருமண புகைப்படம் வெளியிடுங்கள்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நடிகை விஜயலட்சுமி என்னுடன் ஒரு படம் நடித்தார். ஆனால், வீர லட்சுமிக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது.

நான் காதலித்தேன் என்றும், அவரை திருமணம் செய்தேன் என்றும் நடிகை விஜயலட்சுமி சொல்கிறார். அதற்கு, அவர் திருமண புகைப்படங்களை வெளியிட தயாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் உண்மை இல்லை. இதை போல விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...