24 662ab58297083
உலகம்செய்திகள்

நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார் : ஹமாஸ் அறிவிப்பு

Share

நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார் : ஹமாஸ் அறிவிப்பு

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவர் கலில் அல்-ஹய்யா( Khalil al-Hayya) தெரிவித்துள்ளார்.

1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருக்கும் நிலையில், கலில் அல்-ஹய்யா( Khalil al-Hayya) ஹமாஸ் தொடர்பில் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேலின் அழிவு மட்டுமே தங்களின் கொள்கை என கூறிவந்த ஹமாஸ் படைகள் தற்போது ஆயுதங்களைக் கைவிடுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்க சலுகையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் இஸ்ரேல் இந்த நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாது என்றே கூறப்படுகிறது. அக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றிய நிலங்களில் பாலஸ்தீன அரசை உருவாக்குவதை நெதன்யாகு அரசாங்கம் கடுமையாக எதிர்த்தும் வருகிறது.

ஆனால் சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிட்டு, ஹமாஸ் இயக்கத்தையும் கலைத்துவிட தாங்கள் தயார் என Khalil al-Hayya தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடு தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்வதால் இஸ்ரேலுடனான பாலஸ்தீன மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அல்-ஹய்யா வெளிப்படையாக கூறவில்லை.

இரு நாடு தீர்வை பல்வேறு உலக நாடுகள் ஆதரித்த போதும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடும்போக்கு அரசாங்கம் அதனை நிராகரித்தே வந்துள்ளது.

காஸாவில் போர் ஏறக்குறைய ஏழு மாதங்களாக நீடித்து வரும் நிலையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...