இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, லேக் மற்றும் லடாக் பகுதிகளுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
லேவில் இருந்து கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ ஏரிக்கு பைக் ரைடு சென்ற புகைப்படத்தை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்களுடன், ” என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி தனது தந்தை ராஜிவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
1 Comment