8 38
உலகம்செய்திகள்

போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல்

Share

போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல வேண்டாம் என தான் அறிவுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சமூக ஊடக தொகுப்பாளர் ஜோ ரோகனின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஆட்சியில் இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றிருக்காது எனவும் அது அவசியமில்லாதது என தான் நினைப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஒரு பொருட்டாக கூட புடின் மதிக்கவில்லை என கூறிய அவர், புடினுடன் தான் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உனை சிறிய ரொக்கெட் மனிதன் என விபரித்த ட்ரம்ப், அவரை சந்தித்த போது, நீங்கள் நரகத்தில் எரிக்கப்படுவிர்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

நான் ஆட்சியில் இருக்கும் வரை வடகொரியாவுடன் அமெரிக்கா நல்லுறவையே பேணியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஆயுதங்களை உருவாக்குவதை விடுத்து கடற்கரைக்கு சென்று ஓய்வெடுக்குமாறு கிம் ஜொங்-உனை வலியுறுத்தியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...