உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜெலன்ஸ்கியை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். மேலும் அமெரிக்க பாராளுமன்றத்திலும் ஜெலன்ஸ்கி உரையாற்றலாம் என்று கூறப்படுகிறது.
#world
Leave a comment