சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) உய்குர் தன்னாட்சிப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் உயிர் அல்லது உடமை சேதங்கள் குறித்து எவ்வித தகவலும் உடனடியாகப் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

