24 66273dfee392f
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா நிறைவேற்றம்: இன்று மன்னர் ஒப்புதலளிக்கலாம்

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா நிறைவேற்றம்: இன்று மன்னர் ஒப்புதலளிக்கலாம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா, நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானிய பிரதமர்கள் சிலரும், உள்துறைச் செயலர்கள் சிலரும், புலம்பெயர்தலை எப்படியாவது கட்டுப்படுத்தியே தீருவது என கங்கணங்கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளில் ஒரு நடவடிக்கையாக, சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

ஆனால், புலம்பெயர்தல் ஆதரவு தொண்டு நிறுவனங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில், நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா.

நேற்றிரவு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று, அந்த மசோதா முறைப்படி மன்னரின் ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் முதல் குழு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக உள்துறை அலுவலக வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள். ஜூலை மாதம் அவர்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...