18 2
உலகம்செய்திகள்

இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் 3 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு

Share

குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன்படி பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும், குறிப்பிட்ட விசாக்களை கொண்ட பாகிஸ்தானியருக்கு நேற்று தான் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக இருந்தது.

அந்த வகையில் ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 850 இந்தியர்கள் திரும்பியுள்ளனர்.

இதில், குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...