10 1
உலகம்செய்திகள்

கடவுளின் பெயரால் பதிலடி கொடுக்கப்படும்! பாகிஸ்தானால் எச்சரிக்கை

Share

நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று இந்தியாவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் முறுகல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுக்க வாய்ப்புள்ளதால், வான்வழி, கடல்வழி அல்லது தரைவழியாக இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள இராணுவத்தை தமது நாடு தயார் நிலையில் வைத்துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு சூழ்நிலையும் “கடவுளின் பெயரால்” தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்” என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் புரூஸ், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள் என்றும், வளர்ந்து வரும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தங்கள் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி தாக்குதல்களை எப்போது, ​​எங்கு நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...