18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

Share

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (08) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீதமுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மாற்ற முடிவு செய்திருந்தது.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்றையதினம் (10) ஐபிஎல் 2025 தொடரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள போட்டிகளுக்கான திகதிகள் மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...