18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

Share

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (08) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீதமுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மாற்ற முடிவு செய்திருந்தது.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்றையதினம் (10) ஐபிஎல் 2025 தொடரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள போட்டிகளுக்கான திகதிகள் மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...