3 2 scaled
உலகம்செய்திகள்

ஈரானுக்கு பயத்தை காட்டிய ஆசிய நாடு: இரண்டு நாட்களுக்கு பிறகு பழிக்குப் பழி

Share

பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பதாக கூறி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, இரண்டு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது.

ஈரான் மீது பாகிஸ்தான் முன்னெடுத்த வான் தாக்குதலில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தெரிவித்த அதே காரணத்தையே தற்போது பாகிஸ்தானும் தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல் முன்னெடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள பிராந்தியங்களில் இருந்து தாக்குதல்களை நடத்தும் போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ ராணுவ நடவடிக்கை என்பது அசாதாரணமானதாகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் இருந்தாலும், பொதுவாக இணக்கமான சூழலையே காப்பாற்றி வந்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த தகவலை ஈரான் ஊடகங்கள் புதன்கிழமை மதியத்திற்கு மேல் வெளியிட்டிருந்தது.

ஈரான் தாக்குதலை அடுத்து கடும் பின்விளைவுகள் குறித்து பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரை நாடு திரும்ப தடை விதித்தது, பாகிஸ்தானில் இருந்தும் தனது சொந்த தூதரை ஈரான் திரும்பப் பெற்றது.

பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பயங்கரவாத அமைப்பு மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் விளக்கமளித்திருந்தது. இந்த வார தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியா மீதும் ஈரான் தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...