3 2 scaled
உலகம்செய்திகள்

ஈரானுக்கு பயத்தை காட்டிய ஆசிய நாடு: இரண்டு நாட்களுக்கு பிறகு பழிக்குப் பழி

Share

பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பதாக கூறி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, இரண்டு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது.

ஈரான் மீது பாகிஸ்தான் முன்னெடுத்த வான் தாக்குதலில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தெரிவித்த அதே காரணத்தையே தற்போது பாகிஸ்தானும் தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல் முன்னெடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள பிராந்தியங்களில் இருந்து தாக்குதல்களை நடத்தும் போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ ராணுவ நடவடிக்கை என்பது அசாதாரணமானதாகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் இருந்தாலும், பொதுவாக இணக்கமான சூழலையே காப்பாற்றி வந்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த தகவலை ஈரான் ஊடகங்கள் புதன்கிழமை மதியத்திற்கு மேல் வெளியிட்டிருந்தது.

ஈரான் தாக்குதலை அடுத்து கடும் பின்விளைவுகள் குறித்து பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரை நாடு திரும்ப தடை விதித்தது, பாகிஸ்தானில் இருந்தும் தனது சொந்த தூதரை ஈரான் திரும்பப் பெற்றது.

பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பயங்கரவாத அமைப்பு மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் விளக்கமளித்திருந்தது. இந்த வார தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியா மீதும் ஈரான் தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...