3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

Share

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராவல்பிண்டி மைதானத்துக்கு அருகில் இந்திய ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் எதனையும் வழங்கவில்லை. இந்தநிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலையும் விளையாட்டுகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், எப்போதும் பாகிஸ்தான் உறுதியாக இருந்து வருகிறது.

இருப்பினும், மைதானத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் மிகவும் பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

முன்னதாக, முன்னாள் செம்பியன்களான கராச்சி கிங்ஸ் மற்றும் பெசாவர் ஸல்மி ஆகிய அணிகள், வியாழக்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடவிருந்தன.

ஆனால், இந்தியாவின் ட்ரோன் ஒன்று மைதானத்திற்கு அருகில் விழுந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் பாகிஸ்தானின் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முப்பத்தேழு வெளிநாட்டு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....