3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

Share

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராவல்பிண்டி மைதானத்துக்கு அருகில் இந்திய ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் எதனையும் வழங்கவில்லை. இந்தநிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலையும் விளையாட்டுகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், எப்போதும் பாகிஸ்தான் உறுதியாக இருந்து வருகிறது.

இருப்பினும், மைதானத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் மிகவும் பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

முன்னதாக, முன்னாள் செம்பியன்களான கராச்சி கிங்ஸ் மற்றும் பெசாவர் ஸல்மி ஆகிய அணிகள், வியாழக்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடவிருந்தன.

ஆனால், இந்தியாவின் ட்ரோன் ஒன்று மைதானத்திற்கு அருகில் விழுந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் பாகிஸ்தானின் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முப்பத்தேழு வெளிநாட்டு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...