tamilnid 6 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு சிக்கல்

Share

இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு சிக்கல்

ஒரே ஆண்டில் மாலைதீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான தரவுகளை மாலைதீவு சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாலைதீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா, மாலைதீவு இடையேயான மோதல் போக்கு தொடரும் நிலையில் இவ்வாறு , சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் 4ஆம் திகதி வரையில் 41,054 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

ஆனால் இந்தாண்டு, மார்ச் 2ஆம் திகதி வரையில் மாலைதீவு சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 27,224ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13,830 குறைவாகும்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மாலைதீவுக்கு சென்ற மொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் 10 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆனால், இந்த முறை அதன் பங்கு 6% குறைந்துள்ள நிலையில், இந்தியா ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இதேபோல இருந்தால் இந்தியாவில் இருந்து மாலைதீவு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...