tamilnid 6 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு சிக்கல்

Share

இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு சிக்கல்

ஒரே ஆண்டில் மாலைதீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான தரவுகளை மாலைதீவு சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாலைதீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா, மாலைதீவு இடையேயான மோதல் போக்கு தொடரும் நிலையில் இவ்வாறு , சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் 4ஆம் திகதி வரையில் 41,054 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

ஆனால் இந்தாண்டு, மார்ச் 2ஆம் திகதி வரையில் மாலைதீவு சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 27,224ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13,830 குறைவாகும்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மாலைதீவுக்கு சென்ற மொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் 10 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆனால், இந்த முறை அதன் பங்கு 6% குறைந்துள்ள நிலையில், இந்தியா ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இதேபோல இருந்தால் இந்தியாவில் இருந்து மாலைதீவு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...